லண்டன்: பார்சிலோனா குழுவில் மெஸ்ஸி மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக இஎஸ்பிஎன் செய்தி வெளியிட்டுள்ளது.
பார்சிலோனாவின் தலைவராக ஜோன் லப்போர்ட்ட பதவியேற்ற பிறகு, மெஸ்ஸி இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று பேசப்பட்டு வந்ததது. ஆனால், அதற்குப் பதிலாக ஊதியம் குறைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.
பார்சிலோனா குழுவின் ஆக அதிக கோல் போட்டவர், அக்
குழுவிற்காக அதிக ஆட்டங்களில் விளையாடியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆவார் மெஸ்ஸி. அக்குழுவுடனான
21 ஆண்டுக்கால பயணத்தை வரும் 2026ஆம் ஆண்டு வரை அவர் தொடரவுள்ளார்.

