தாய்லாந்தில் புதிய உச்சம் தொட்ட கிருமித்தொற்று

தாய்லாந்தில் புதிய உச்சம் தொட்ட கிருமித்தொற்று

1 mins read
88bc4d61-96ed-422d-8b74-9ae28e574b39
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் இதற்­கு­முன் இல்­லாத வகை­யில் நேற்று புதி­தாக 9,692 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அத­னால் மேலும் 67 பேர் இறந்­து­விட்­ட­னர். இதை­ய­டுத்து, மொத்த பாதிப்பு 381,907ஆக­வும் உயி­ரி­ழப்பு 3,099ஆக­வும் உயர்ந்­து­விட்­டது.

கொரோனா பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த தாய்­லாந்து போராடி வரு­கிறது. இவ்­வே­ளை­யில், அந்­நாட்­டிற்கு 61 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை வழங்­கு­வ­தற்­கான காலக்­கெ­டுவை மேலும் ஐந்து மாதங்­கள் நீட்­டிக்­கும்­படி ஆஸ்ட்­ரா­ஸெ­னக்கா நிறு­வ­னம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

மொத்­தம் 66 மில்­லி­யன் மக்­கள்­ வாழும் தாய்­லாந்­தில் இது­வரை கிட்­டத்­தட்ட ஐந்து விழுக்­காட்­டி­னர் மட்­டுமே இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுள்­ள­னர்.

இத­னி­டையே, கிரு­மிப் பர­வல் தொடர்ந்து கூடி வரு­வ­தால் அதி­க­ரித்­துள்ள உயிர்­வா­யுத் தேவை­யைச் சமா­ளிக்க, அர­சாங்­கமும் தனி­யார் நிறு­வ­னங்­களு­ம் இணைந்து செயல்­படும் என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோவி தெரிவித்துள்ளார்.