சென்னை: கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில், "நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குத் தேவையா?" என்ற தலைப்பில் பொதுமக்கள் பங்கேற்ற கருத்துக்கணிப்பு அறிக்கை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், பெரும்பாலானோர் அதாவது 87.1% மக்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். வெறும் 11.9% மக்கள் மட்டும் நீட் தேர்வை விரும்புவதாகக் கூறினர்.
நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாக 90.5% மக்கள் கருத்துத் தெரிவித்தனர். இந்தக் கருத்துக்கணிப்பில் 42,834 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் ஒன்பது முக்கியக் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

