தலைகீழாக திருக்குறள்களை எழுதி சாதனை

தலைகீழாக திருக்குறள்களை எழுதி சாதனை

1 mins read
db39e7d4-d482-4a5f-b68d-2a84d412dcaf
-

காரைக்­குடி: சிவ­கங்கை மாவட்­டம் காரைக்­கு­டி­யில் கார் ஓட்­டு­நர் 1,330 திருக்­கு­றள்­க­ளை­யும் 17 மணி 19 நிமி­டங்­களில் தலை­கீ­ழாக எழுதி சாதனை படைத்து சோழன் உலக சாதனை புத்­த­கத்­தில் இடம் பெற்­றார், நாட்­டுச்­சே­ரி­யைச் சேர்ந்­த­கார்த்­தி­ய­மூர்த்தி.

பிளஸ்-1 வரை படித்த இவர், குடும்ப சூழ்­நிலை கார­ண­மாக படிப்பை பாதி­யில் விட்டு, கோவை­யில் கார் ஓட்­டு­ந­ராக உள்­ளார். இருந்­த­போ­தி­லும் தமிழ் மீதான பற்­றால் திருக்­கு­றள் போன்ற தமிழ் நூல்­களை படித்து வந்­துள்­ளார்.

மருத்­துவ விரைவு வாக­னங்­களில் எழுத்­து­கள் தலை­கீ­ழாக எழு­தப்­பட்­டி­ருக்­கும். அது­போன்ற ஒரு மருத்­துவ வாக­னத்­தைக் கண்ட கார்த்­தி­ய­மூர்த்­திக்கு, திருக்­கு­றளை நாம் ஏன் இவ்­வாறு எழு­தக்­கூ­டாது என்ற எண்­ணம் தோன்­றி­யது. அதன் அடிப்­ப­டை­யில் சில மாதங்­க­ளி­லேயே 1,330 குறள்­க­ளை­யும் தலை­கீ­ழாக எழு­தக் கற்­றுக்­கொண்­டார்.

பின்­னர் சிறிய தாளில் 1,330 திருக்­கு­றள்­க­ளை­யும் எழுதி முடித்­துள்­ளார். இதற்கு அவ­ருக்கு 45 நாட்­கள் ஆகின. அது­வும் முழு­நே­ர­மாக இல்­லா­மல் அந்த 45 நாட்­க­ளி­லும் தனது ஓய்வு நேரங்­களில் மட்­டுமே அவர் இந்த தலை­கீழ் எழு­தும் வேலை­யைச் செய்­துள்­ளார்.

மேலும் இதனை உலக சாத­னை­யாக மாற்­றும் முயற்­சி­யாக நேற்று முன்­தி­னம் காரைக்­கு­டி­யில் அரி­யக்­குடி சாலை­யில் உள்ள ஓர் அரங்­கில் சோழன் உல­கச் சாதனை புத்­தக நிறு­வ­னம், வள்­ளு­வர் பேரவை சார்­பில் நடந்த நிகழ்ச்­சி­யில் திருக்­கு­றள்­களை தலை­கீ­ழாக எழுதி கூடி­யி­ருந்­தோர் பர­வ­சப்­ப­டுத்­தி­னார்.