கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை உயர்வு

கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை உயர்வு

1 mins read
67592fd9-d0d6-42e4-9bb1-0dbd62201cbc
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கல்லறையில் ஒதுங்கியுள்ள வாகனம். படம்: ஏஎஃப்பி -

பெர்­லின்: கன­மழை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்­ளத்­தில் சிக்கி ஜெர்­ம­னி­யில் மட்­டும் மாண்­டோர் எண்­ணிக்கை 133ஆக உயர்ந்­துள்­ளது.

வெள்ள நீர் வடி­யும்­போது மேலும் சட­லங்­கள் தெரி­யக்­கூ­டும் என்­ப­தால் பலி எண்­ணிக்கை மேலும் உய­ரும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

ஜெர்­ம­னி­யில் போலி­சார், ராணுவ வீரர்­கள் மற்­றும் அவ­சர நிலை பணி­யா­ளர்­கள் என சுமார் 15,000 பேர் மீட்­புப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, வெள்­ளம் சற்று குறை­யத் தொடங்­கி­ய­தை­ய­டுத்து சிலர் தங்­க­ளது இருப்­பி­டங்­

க­ளுக்­குத் திரும்ப தொடங்­கி­யுள்­ள­னர்.