பிரதமர் போரிஸ் ஜான்சன் சுய தனிமைப்படுத்தல் பிரிட்டனில் இன்று முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்வு

பிரதமர் போரிஸ் ஜான்சன் சுய தனிமைப்படுத்தல் பிரிட்டனில் இன்று முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்வு

2 mins read
521af307-64e3-4ee2-8d60-7c0600c4a7f9
-

லண்­டன்: பிரிட்­ட­னில் இன்று முதல் கிட்­டத்­தட்ட அனைத்து கட்­டுப்

பாடு­களும் தளர்த்­தப்­ப­ட­வுள்ள நிலை­யில், பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­ச­னும் அமைச்­சர் ஒரு­வ­ரும் தொற்­றுக்கு ஆளான ஒரு­வ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­தாக தேசிய சுகா­தார சேவை தெரி­வித்­தது. மேலும் ஓர் அமைச்­ச­ருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

டெல்டா வகை கிரு­மித்­தொற்­றால் பிரிட்­ட­னில் தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யுள்­ளது.

அங்கு கடந்த சில நாட்­க­ளாக, நாளொன்­றுக்கு 50,000க்கும் அதி­க­மாக தொற்று சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன.

அதோடு பல்­லா­யி­ரக்­க­ணக்­

கா­னோர் 10 நாட்­க­ளுக்­குச் சுய­மாக தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள கேட்டுக் கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

ஆனால் ஜான்­ச­னும் நிதி­­அமைச்­சர் ரிஷி சுனக்­கும் சுய தனி­மைப்­

ப­டுத்­தல் விதிக்கு உட்­ப­டா­மல் அலு­வ­ல­கத்­தில் இருந்து வேலை செய்­வார்­கள் என்று முத­லில் தெரி­விக்­கப்­பட்­டது.

அர­சாங்­கத்­தின் சோதனை திட்­டம் ஒன்றின் கீழ், இவர்­க­ளுக்கு அன்­றாட கிரு­மித்­தொற்று பரி

­சோ­தனை நடத்­தப்­படும் என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் கூறி­யி­ருந்­தது.

ஆனால் இந்த விதி­வி­லக்­கிற்கு எதி­ராக கடு­மை­யான விமர்­ச­னங்­கள் எழுந்­த­தை­ய­டுத்து, அடுத்த மூன்று மணி நேரத்­தில் அந்த முடிவு திரும்­பப் பெற்­றுக்­கொள்­ளப்­பட்டு, அவர்­கள் சுய­மாக தனி­மைப்

படுத்­திக்­கொள்­வார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக, இரண்டு தவணை தடுப்­பூ­சி­யும் போட்­டுக்­கொண்ட சுகா­தார அமைச்­சர் சஜித் ஜாவித்­திற்கு சனிக்­கி­ழ­மை­யன்று தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

குடும்­பத்­தோடு சுய­மாக

தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்­டுள்ள அவர், தனக்கு லேசான அறி­கு­றி­கள் உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளார்.

கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வது குறித்து சுகா­தார நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­தி­ருந்த போதி­லும், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தால் பாதிப்பு, பலி எண்­ணிக்கை இரண்­டும் குறைந்­துள்­ள­தாக பிரிட்­டிஷ் பிர­த­மர் ஜான்­ச­னும் அவ­ரது அமைச்­சர்­களும் கூறி வரு­கின்­ற­னர்.

பெரி­யோர் எண்­ணிக்­கை­யில் அங்கு இது­வரை 87.8 விழுக்­காட்­டி­ன­ருக்கு முதல் தவணை தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

அதோடு மூன்­றில் இரண்டு பங்கு பெரி­ய­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் இலக்­கை­யும் பிரிட்­டிஷ் அர­சாங்­கம் அடைந்­து

உள்­ளது.