தாய்லாந்தில் மேலும் சில மாநிலங்களுக்கும் முடக்கநிலை

தாய்லாந்தில் மேலும் சில மாநிலங்களுக்கும் முடக்கநிலை

2 mins read
7bc00b36-a8d6-4b6e-a9a7-cf71ced5f261
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் மேலும் மூன்று மாநி­லங்­களில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன.

பேங்­காக் உள்­ளிட்ட ஒன்­பது மாநி­லங்­களில் ஏற்­கெ­னவே சென்ற திங்­கட்­கி­ழமை முதல் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் உள்­ளன.

தாய்­லாந்­தில் முழு முடக்கநிலை இல்லை என்­றா­லும் தொற்று பர­வும் அதிக அபா­ய­முள்ள பகு­தி­களில் கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றைப்­ப­டுத்தப் ­பட்­டுள்­ளன.

இருப்­பி­னும் சென்ற மூன்று நாட்­க­ளாக தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை அங்கு புதிய உச்­சத்தை அடைந்து வரும் நிலை­யில் மேலும் சில மாநி­லங்­களில் கட்­டுப்

­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டு

உள்­ளன.

அல்ஃபா மற்­றும் டெல்டா வகை தொற்­றால் கிரு­மிப் பர­வல் தீவி­ர­

ம­டைந்து உள்­ள­தால் நேற்று புதி­தாக 11,397 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். 101 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

இதை­ய­டுத்து, சோன்­பூரி, அயோத்தயா மற்­றும் சச்­சோங்­சாவ் மாநி­லங்­களில், நாளை முதல் கடைத் தொகு­தி­கள் மூடப்­படும். இரவு 9 மணி முதல் 4 மணி வரை ஊர­டங்கு நடப்­பில் இருக்­கும் என்று அர­சாங்க அறிக்கை தெரி­வித்­தது.

கிரு­மிப் பர­வல் மோச­ம­டைந்­துள்­ள­தால், தாய்­லாந்­தின் சுகா­தார அமைப்பு திண­றக்­கூ­டிய நிலை­யில் உள்­ளது.

ஆனால் இந்த நிலைமை மேலும் சில மாதங்­க­ளுக்கு நீடிக்­கும் என்று சுகா­தார அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­து

உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், பிர­த­மர் பிர­யுத் சான் ஓசா பதவி வில­கக் கோரி தாய்­லாந்து இளம் ஆர்­வ­லர்­கள் நேற்று போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

பொது இடங்­களில் ஒன்­று­

கூ­டு­வ­தற்கு நாடு முழு­வ­தும் விதிக்­கப்­பட்­டுள்ள தடையை அவர்­கள் பொருட்­ப­டுத்­த­வில்லை.

பெருகி வரும் கிருமித்தொற்றும் அதன் காரணமாக நீண்ட காலமாக முடங்கியிருக்கும் பொருளாதாரம் ஆகியவற்றால் அவர்கள் விரக்தி அடைந்துள்ளதே போராட்டத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.