சிட்னி: ஆஸ்திரேலியாவில் தொற்று சம்பவங்கள் நேற்று சற்றே குறைவாக பதிவானது.
சிட்னியைத் தலைநகரமாகக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்று 105 பேர் தொற்றுக்கு ஆளாகினர். 111 என்ற முந்திய நாள் எண்ணிக்கையைவிட இது சற்றே குறைவு.
இவர்களில் 27 பேர் தொற்றுக்கு ஆளாகியிருந்த சமயத்தில், சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
"கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக முடக்கநிலை இருந்தாலும் தொற்று சம்பவங்கள் பெருமளவில் குறையவில்லை.
"தொற்றுக்கு ஆளாவோரில் பெரும்பாலானோர் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாக இருப்பது கவலையளிப்பதாக உள்ளது," என்றார் அம்மாநில முதல்வர்.
கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் ஜூலை 30க்குள், தொற்று இல்லாத நிலையை அடைவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
எனவே கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுவதற்கான வாய்ப்பையும் அவர் நிராகரிக்க
வில்லை.
அதுபோல் அதன் அண்டை
மாநிலமான விக்டோரியாவில் நேற்று 16 தொற்று சம்பவங்கள் பதிவாகின. முந்தைய நாள் அது 19ஆக இருந்தது.

