தாய்லாந்தில் தொற்று அதிகரிப்பு

தாய்லாந்தில் தொற்று அதிகரிப்பு

2 mins read
5819feed-d265-4fd0-86e3-d489697f1a49
பேங்காக்கிற்கு அருகேயுள்ள சமுட் பிரகான் என்னும் கிராமத்தில் மக்களிடம் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள படகில் செல்லும் தாய்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ் -

பேங்காக்: தாய்­லாந்­தில் தொடர்ந்து நான்­கா­வது நாளாக கொவிட்-19 தொற்று 11,000ஐத் தாண்­டி­யுள்­ளது. கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் அங்கு 11,784 தொற்­றுப் பாதிப்­பும், 81 தொற்று மர­ணங்­களும் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளன என்று அந்­நாட்­டின் சுகா­தா­ரத்­துறை நேற்று தெரி­வித்­தது.

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று பதிவான தொற்றுப்பாதிப்பு 11,397ஐ காட்­டி­லும் இது அதி­கம். தொற்­றுப் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 100 பேர் சிறைக்­கை­தி­கள் என்று கூறப்­பட்­டது. இவற்­று­டன் சேர்த்து மொத்­தம் 403,386 பேர் தொற்­றால் பாதிப்­பும், 3,341 பேர் தொற்று மர­ணங்­களும் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளன.

சென்ற ஏப்­ரல் மாதத்­தில் இருந்து தொற்­றின் மூன்­றா­வது அலை தொடங்­கி­யுள்­ளது.

தொற்­றுப் பாதிப்­புக்கு சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 386,307 ஆகி­யுள்­ளது.

இது­வரை சிகிச்சை பெற்று குண­ம­டைந்து மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வீடு திரும்­பி­யோர் எண்­ணிக்கை 262,225 ஆகி­யுள்­ளது.

தாய்­லாந்­தில் கொவிட்-19 தொற்று தீவி­ர­ம­டைந்து வரும் இவ்­வே­ளை­யில், நேற்று முன்­தி­னம் ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­கள் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் மீறி, ஆயி­ரக்­க­ணக்­கில் ஒன்­று­கூடி, அர­சாங்­கத்­தின் கட்­டுப்­பா­டு­க­ளைக் கண்­டித்­தும், பிர­த­ம­ரைப் பதவி வில­கக் கோரி­யும் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

போராட்­டக்­கா­ரர்­க­ளின் தொற்று கட்­டுப்­பாட்டு விதி­மீ­ற­லால் தொற்­றுப் பாதிப்பு எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

இப்­போ­துள்ள சூழ­லில் கொரோனா தொற்­றால் அங்­குள்ள மருத்­து­வ­ம­னை­கள் நிரம்பி வழி­கின்­றன.

கொரோனா நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்­சை­ய­ளிக்க முடி­யா­மல் மருத்­து­வ­மனை ஊழி­யர்­கள் திணறி வரு­கின்­ற­னர்.

தடுப்­பூசி கொள்­மு­தல் செய்­வ­தில் அர­சாங்­கம் சுணக்­கம் காட்­டு­வ­தால் தான் தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது என்­றும் அத­னால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் கட்­டுப்­பா­டு­க­ளால் நாட்­டின் வர்த்­த­க­மும் பொரு­ளி­ய­லும் பெரி­ய­ள­வில் பாதிக்­கப்­ப­டு­வ­தாகவும் அர­சாங்­கத்­தின் மீது குறை­கூ­றல்­கள் எழுந்­துள்­ளன.

தொற்று அதி­க­ரிப்­ப­தைக் கட்­டுப்­ப­டுத்த அர­சாங்­கம் நேற்று, கட்­டுப்­பாட்டை நீட்­டிப்­ப­தாக அறி­வித்­தது.

அதன்­படி, வெளி­யூர்­க­ளுக்குப் பய­ணம் மேற்­கொள்­ள­மு­டி­யாது. அத்­து­டன் பெரிய கடைத்­தொ­கு­தி­கள் திறக்­கப்­ப­ட­மாட்டா. மூன்­றா­வது நாளா­கத் தொடர்ந்து தொற்று அதி­க­ரித்து வரு­வ­தால் அங்கு கட்­டுப்­பா­டு­கள் மேலும் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது. தொற்று அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள மேலும் மூன்று மாவட்­டங்­களில் இர­வு­நேர முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.