லண்டன்: வயதில் மூத்தவர்களைக் காப்பாற்றும் வகையில் முடக்க
நிலையைக் கொண்டு வர பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தயாராக இருக்கவில்லை என்று முன்னாள் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
வேலையை விட்டு விலகிய ஓராண்டிற்குப் பிறகு தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த முதல் பேட்டியின் சில பகுதிகளில் முன்னாள் அரசியல் ஆலோசகரான டோமினிக் கம்மிங்ஸ் இவ்வாறு கூறியிருக்கிறார்.
பெரும்பாலும் 80 வயதிற்கு மேற்பட்டவர்களே இறப்பதால், சென்ற ஆண்டு இரண்டாவது முறையாக முடக்கநிலை உத்தரவைப் பிறப்பிக்க ஜான்சன் தயாராக இல்லை என்று கம்மிங்ஸ் கூறியிருந்தார்.
மேலும் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலக்கட்டத்தில் 95 வயதான இங்கிலாந்து ராணி எலிசபெத்தையும் ஜான்சன் சந்திக்க விரும்பியதாகவும் அவர் சொன்னார்.
அத்தியாவசியமற்ற, குறிப்பாக மூத்தவர்களைச் சந்திப்பதைத் தவிர்க்குமாறு அப்போது அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தவிர்த்திருக்கக்கூடிய ஆயிரக்
கணக்கான கொவிட்-19 உயிரிழப்பு
களுக்கு அரசாங்கமே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
ஆனால் இவற்றின் உண்மைத் தன்மையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் சரிபார்க்க முடியவில்லை.