வாஷிங்டன்: அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 340,000 ஏக்கர் பரப்பளவு நிலம் தீக்கிரையானது.
அமெரிக்க வரலாற்றில் இது வரை ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்களில் ஒன்றாகும் இது.
'பூட்லெக் தீ' என்று அழைக்கப்படும் இக்காட்டுத் தீயினால் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து குறைந்தது 2,000 குடியிருப்பாளர்கள் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். குறைந்தது 160 வீடுகள் தீக்கிரையாயின.

