அடிலெய்ட்டில் கிருமித்தொற்று; ஏழு நாள்களுக்கு முடக்கம்

அடிலெய்ட்டில் கிருமித்தொற்று; ஏழு நாள்களுக்கு முடக்கம்

1 mins read
d063c6dc-9c56-4da6-b38b-7763722efedc
அடிலெய்ட்டின் விக்டோரியா பார்க் கொவிட்-19 பரிசோதனை நிலையத்தில் வாகனமோட்டி ஒருவரிடம் சுகாதார ஊழியர்கள் பரிசோதனை மேற்கொண்டார்கள். படம்: ஏஎஃப்பி -

யங்­கூன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் அடி­லெய்ட் நக­ரத்­தில் ஐந்து கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் உறுதி செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து நேற்று முதல் அங்கு முடக்­க­நிலை உத்­த­ரவு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

சிட்னி, மெல்­பர்­னை தொடர்ந்து தெற்கு ஆஸ்­தி­ரே­லிய மாநி­லத்­தின் தலை­ந­க­ர­மான அடி­லெய்ட் நக­ரத்­தின் 14 மில்­லி­யன் மக்­களும் வீட்­டி­லேயே முடங்­கியுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி முதல் முடக்­க­நிலை கொண்டு வரப்­பட்­ட­தாக குறிப்­பிட்ட அம்­மா­நில முதல்­வர் ஸ்டீ­வன் மார்­சல் அடுத்த ஏழு நாட்­க­ளுக்கு இது நடப்­பில் இருக்­கும் என்­றும் குறிப்­பிட்­டார்.

25 மில்­லி­யன் மக்­கள்­தொகை கொண்ட ஆஸ்­தி­ரே­லி­யா­வில் வெறும் 11% மக்களுக்கு மட்­டுமே தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. ஆனால் சமூ­க­ள­வி­லான கிரு­மிப் பர­வல் பெரு­ம­ளவு கட்­டுக்­குள்­ளேயே உள்ளது­. சிட்­னி­யில் இம்­மாத இறுதி வரை முடக்­க­நிலை நடப்­பில் இருக்­கும் நிலை­யில், மெல்­பர்­னில் நேற்று முடி­வ­டை­ய­வி­ருந்த முடக்­க­நிலை மேலும் சில நாட்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.