முடக்கநிலையிலும் அதிகரிக்கும் தொற்று

1 mins read
f9a5986f-7d43-46b3-ae94-c9c206d0f859
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் இரண்டு பெரிய நக­ரங்­களில் கடந்த சில நாட்­க­ளாக முடக்­க­நிலை நடப்­பில் இருந்­தா­லும் அங்கு கிரு­மித்­தொற்று ஏறு­மு­க­மா­கவே உள்­ளது.

ஆஸ்­தி­ரே­லிய மக்­கள்­தொ­கை­யில் கிட்­டத்­தட்ட பாதி பேர் முடக்­க­நிலை உத்­த­ர­வால் வீட்­டி­லேயே முடங்­கிக் கிடக்­கும் நிலை­யில், தளர்­வு­கள் கொண்­டு­வ­ரப்­படும் என்ற நம்­பிக்­கையைத் தகர்க்­கும் வகை­யில் அங்கு கிரு­மிப் பர­வல் தீவி­ர­ம­டைந்து வரு­கிறது.

கடந்த நான்கு வாரங்­க­ளாக முடங்­கி­யுள்ள சிட்­னி­யைத் தலை­ந­க­ர­மாகக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் நேற்று 110 புதிய தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­யின. நேற்று முன்­தி­னம் அந்த எண்­ணிக்கை 78ஆக இருந்­தது.

அது­போல் நேற்று முன்­தி­னம் 9 தொற்று சம்­பங்­கள் மட்­டுமே பதி­வான விக்­டோ­ரியா மாநி­லத்­தில். நேற்று 22 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­னர். அங்கு கிட்­டத்­தட்ட இரண்டு வார­கா­ல­மாக முடக்­க­நிலை உள்­ளது.

"நாம் சில வாரங்­க­ளுக்கு முன்பே, முடக்­க­நிலை உத்­த­ர­வைச் செயல்­ப­டுத்­தா­மல் இருந்­தி­ருந்­தால், இந்­நே­ரம் தொற்று சம்­ப­வங்­கள் ஆயி­ரக்­க­ணக்­கில் இருந்­தி­ருக்­கும் என்­ப­தில் கொஞ்­ச­மும் சந்­தே­க­மில்லை," என்­றார் நியூ சவுத் வேல்ஸ் முதல்­வர் கிளா­டிஸ் பெரெ­ஜிக்­லி­யன்.

தொற்று கண்­ட­றி­யப்­ப­டு­வ­தற்கு முன்பு சமூக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்­கை­தான் தற்­போது கவ­லை­ய­ளிக்­கும் வகை­யில் உள்­ளது என்று கூறும் சுகா­தார நிபு­ணர்­கள் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­வ­தற்கு முன்பு அந்த எண்­ணிக்கை சுழி­ய­மாக இருக்க வேண்­டும் என்­கின்­ற­

னர்.

இந்­நி­லை­யில், முடக்­க­நிலை எப்­போது தளர்த்­தப்­படும் என்ற நிச்­ச­ய­மற்ற சூழ­ல் பற்றியும் போலி­சா­ரின் உயர் கண்­கா­ணிப்­பில் இருப்­பது குறித்­தும் பலர் விரக்­தியை வெளிப்­

படுத்­தி­யுள்­ள­தாக பிபிசி செய்தி கூறு­கிறது.