'அரசியல் ரீதியிலான நெருக்கடி'

'அரசியல் ரீதியிலான நெருக்கடி'

2 mins read
f6b42be6-0a7c-4d00-83ab-db368e28529f
-

மலேசிய முன்னாள் அமைச்சர் சையத் சாதிக் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டு

கோலா­லம்­பூர்: மலே­சிய முன்­னாள் அமைச்­ச­ரான சையத் சாதிக் அப்­துல் ரஹ்­மான் மீது நீதி­மன்­றத்­தில் நேற்று நிதி­மு­றை­கேடு, நம்­பிக்கை மோசடி குற்­றங்கள் ­சாட்­டப்­பட்­டன.

பெர்­சத்து கட்­சி­யின் இளை­யர் அணித் தலை­வ­ராக இருந்­த­போது, கட்­சி­யின் ஒரு மில்­லி­யன் ரிங்­கிட் நிதியை அவர் முறை­கே­டா­கக் கையாண்­ட­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

கட்­சி­யின் மத்­திய குழு­வின் அனு­மதி இல்­லா­மல், காசோ­லை­யைப் பயன்­ப­டுத்தி கட்சி நிதியை வங்­கி­யில் இருந்து எடுத்­­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

14வது பொதுத் தேர்­தல் நிதி­யான 120,000 ரிங்­கிட் தொகையை முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தா­க­வும் அவர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டது. 2018 ஏப்­ரல் மாதத்­தில் இந்த முறை­கேடு நடந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

2018 பொதுத் தேர்­த­லில்

மகா­தீ­ரின் பெர்­சத்து கட்­சி­யில் போட்­டி­யிட்ட சையத் சாதிக், மலே­சி­யா­வின் ஆக இள­வ­யது அமைச்­ச­ராக பொறுப்­பேற்­றார்.

25 வய­தில் இளை­யர், விளை­யாட்­டுத் துறை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட இவர், பக்­கத்­தான் கூட்­ட­ணி­யில் இருந்து பெர்­சத்து வில­கி­ய­தைத் தொடர்ந்து சென்ற ஆண்டு மே மாதம் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டார்.

தற்­போ­தைய பிர­த­மர் முகை­தீன் அர­சாங்­கத்­தி­லும் இணை­யாத சையத், சொந்­த­மாக மூடா என்ற அர­சி­யல் கட்சி ஒன்­றைத் தொடங்­கி­னார்.

தனது கையி­ருப்­பில் இருந்த 250,000 ரிங்­கிட் ரொக்­கப் பணம் காணா­மல் போய்­விட்­ட­தாக சையத் சாதிக் சென்ற ஆண்டு புகார் செய்­த­தைத் தொடர்ந்து, அவ­ருக்கு எப்­படி இவ்­வ­ளவு பணம் வந்­தது என்று ஊழல் தடுப்பு ஆணை­யம் விசா­ர­ணை­களை முடுக்­கி­விட்

­டது.

அந்த பணம் பெர்­சத்து கட்­சி­யின் பணம் அல்ல, அது தனக்­கும் தனது பெற்­றோ­ருக்­கும் சொந்­த­மான பணம் என்று சையத் கூறி­னார்.

இந்­நி­லை­யில், தன் மீதான இந்த வழக்கு பற்றி குறிப்­பிட்ட அவர், "என் மீதான வழக்கு, எனக்கு அர­சி­யல் ரீதி­யா­கத் தரப்­படும் நெருக்­கடி. பெரிக்­கத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணிக்கு ஆத­ரவு தர நான் மறுத்­த­தை­ய­டுத்து என் மீது இந்த வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

"பெரிக்­கத்­தா­னுக்கு ஆத­ரவு தரு­வ­தை­விட நீதி­மன்ற வழக்­கைச் சந்­திக்க நான் தயார்," என்­றார்.

பெரிக்­கத்­தான் நேஷ­னல் ஆட்சி பொறுப்­பேற்ற பிறகு, நிதி முறை­கேடு குற்­றச்­சாட்­டிற்கு ஆளான பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யின் இரண்­டா­வது அமைச்­சர் இவர்.

முன்பு டிஏபி தலை­வர் லிம் குவான் எங் மீது கட­லுக்­க­டி­யில் சுரங்­கப்­பாதை திட்­டத்­தில் நிதி­

மு­றை­கேடு செய்­த­தாக குற்­றம் சாட்­டப்­பட்­டது.