வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் மாவட்டங்களில் பாதி தலிபான் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்க படைகளின் மூத்த தளபதி மார்க் மில்லி கூறியுள்ளார். மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை இது குறிப்பதாகவும் அவர் சொன்னார்.
419 மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்கள் தலிபான் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் சொன்னார்.
சென்ற மாதம் 81 மாவட்டங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறியிருந்தார். அமெரிக்கப் படைகள் வெளியேறியதில் இருந்து அங்கு தலிபான் படை முன்னேறி வருகிறது.