கொவிட்-19 விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சீனா

கொவிட்-19 விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சீனா

1 mins read
128421bb-25df-4bd6-b4ed-732da1164c95
-

பெய்­ஜிங்: கொவிட்-19 கிரு­மித்­தொற்று உரு­வா­னது குறித்­த இரண்­டாம் கட்ட விசா­ர­ணைக்­கான உலக சுகா­தார அமைப்­பின் திட்­டத்தை சீனா நிரா­க­ரித்­து­விட்­ட­தாக மூத்த சுகா­தார அதி­காரி ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

வூஹான் நக­ரில் உள்ள ஆய்­வ­கம், சந்­தை­களை ஆராய்­வது உள்­ளிட்ட கிரு­மித்­தொற்று உரு­வான விதம் குறித்து ஆராய்­வ­தற்­கான இரண்­டாம் கட்ட திட்­டத்தை அமைப்பு இந்த மாதம் முன்­

மொ­ழிந்­தது.

"சில கோணங்­களில், பொது அறி­வைப் புறக்­க­ணித்து, அறி­வி­யலை மீறு­வது போன்ற கிருமி உரு­வான விதத்தைக் கண்­டு­பி­டிக்­கும் திட்­டத்தை நாங்­கள் ஏற்கமாட்­டோம்," என்று சீனா­வின் தேசிய சுகா­தார ஆணை­யத்­தின் துணை அமைச்­சர் டாக்­டர் ஜெங் யிக்­சின் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

"சீன வல்­லு­நர்­கள் அளித்த பரி­சீ­ல­னை­கள், பரிந்­து­ரை­களை உலக சுகா­தார அமைப்பு தீவி­ர­மாக மறு­ஆய்வு செய்­யும் என்­றும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று உரு­வான விதத்தை எந்­த­வித அர­சி­யல் தலை­யீ­டும் இல்­லா­மல், விஞ்­ஞான ரீதி­யில் அமைப்பு அணுகும் என நாங்­கள் நம்­பு­கி­றோம்," என்­றும் அவர் கூறி­னார்.