யங்கூன்: நாட்டின் எல்லையோரங்களில் கிருமித் தொற்று அதிகரித்து வருவதால் சீனாவின் தடுப்பூசியைப் பயன்படுத்த மியன்மார் அரசு முடிவு செய்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 6,701 பேர் பாதிக்கப்பட்டனர். இன்று ஒரே நாளில் தொற்றுக்கு 319 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சீனா வழங்கும் இரண்டு மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப் போவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, விசா மோசடி செய்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சீன ஆய்வாளருக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் கைவிடப்போவதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க தொழில்நுட்பங்கள் சீனாவுக்கு கைமாறுவதைத் தடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக அவர் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருந்தது.