தோக்கியோ: ஒலிம்பிக் போட்டியின் வாட்சண்டையில் உலகின் முன்னணி வீராங்கனைக்கு கடும் சவாலாக அமைந்தது சிங்கப்பூர் வீராங்கனை கிரியா டிகானா அப்துல் ரஹ்மானின் வாள்வீச்சு.
வாட்சண்டை போட்டியில் ருமேனிய வீராங்கனையான அன்ன மரியா பொப்பேசுவை எதிர்கொண்டார் சிங்கப்பூரின் டிகானா.
அப்போட்டி முடிய சில நிமிடங்களே இருந்தபோது, இரு
வருக்குமான புள்ளிகள் 10-11 என இருந்தது போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.
உலகின் முதல் நிலை வீராங்
கனையைவிட ஒரு புள்ளி மட்டுமே குறைவாக பெற்று பொப்பேசுவிற்குக் கடும் சவால் கொடுத்தார் சிங்கப்பூரின் டிகானா.
ஆனால், ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை பதக்கம் வென்றிருந்த பொப்பேசு, அப்போட்டியை 15-10 என்று வென்றார்.
ஏப்ரல் மாதம் நடந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் தொடர்ச்சியாக முன்னிலை வீராங்கனை
களுக்கு டிகானா சவாலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்
கது.