கனமழையால் பிலிப்பீன்ஸில் மூவர் மரணம், ஐவர் காயம்

மணிலா: பிலிப்­பீன்­ஸின் வடக்­குப் பகு­தி­யில் பெய்த கன­மழை கார­ண­மாக குறைந்­தது மூவர் மாண்ட­ னர். ஐந்து பேர் காய­முற்­ற­தாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கன­ம­ழை­யு­டன் புய­லும் தாக்­கி­ ய­தில் தலை­ந­கர் மணிலா உட்­பட நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் வெள்­ளம் ஏற்­பட்­டது.

தாழ்­வான பகு­தி­களில் வாழும் மக்­கள் தங்­கள் வசிப்­பி­டங்­க­ளி­

லி­ருந்து வெளி­யே­றும் நிலை ஏற்­பட்­டது.

மணி­லா­வில் வெள்­ளம் இடுப்­

ப­ளவு உயர்ந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

சாலை­களில் வெள்­ள­ம் புகுந்­த­தால் போக்­கு­வ­ரத்து மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டது.

மரம் ஒன்று வேராடு சாய்ந்து கார் மீது விழுந்­த­தில் அந்­தக் காருக்­குள் இருந்­த­வர் மாண்­ட­தாக பிலிப்­பீன்­ஸின் தேசிய பேரி­டர் நிர்­வாக அமைப்­பின் இயக்­கு­நர் ரிகார்டோ ஜலாட் செய்­தி­யா­ளர்

­க­ளி­டம் தெரி­வித்­தார்.

மின்­னல் தாக்கி இரு­வர் மாண்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

கன­ம­ழை­யால் லுசோன் தீவில் உள்ள 212 கிரா­மங்­க­ளைச் சேர்ந்த ஏறத்­தாழ 88,000 பேர் கடு­மை

­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைப்பு கூறி­யது.

கிட்­டத்­தட்ட 25,000 பேர் வெளி­யேற்­றப்­பட்டு துயர்­து­டைப்பு முகாம்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!