மணிலா: பிலிப்பீன்ஸின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குறைந்தது மூவர் மாண்ட னர். ஐந்து பேர் காயமுற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழையுடன் புயலும் தாக்கி யதில் தலைநகர் மணிலா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் வசிப்பிடங்களி
லிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
மணிலாவில் வெள்ளம் இடுப்
பளவு உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சாலைகளில் வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மரம் ஒன்று வேராடு சாய்ந்து கார் மீது விழுந்ததில் அந்தக் காருக்குள் இருந்தவர் மாண்டதாக பிலிப்பீன்ஸின் தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பின் இயக்குநர் ரிகார்டோ ஜலாட் செய்தியாளர்
களிடம் தெரிவித்தார்.
மின்னல் தாக்கி இருவர் மாண்டதாகவும் அவர் கூறினார்.
கனமழையால் லுசோன் தீவில் உள்ள 212 கிராமங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 88,000 பேர் கடுமை
யாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைப்பு கூறியது.
கிட்டத்தட்ட 25,000 பேர் வெளியேற்றப்பட்டு துயர்துடைப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.