சோல்: கோடைக்கால விடுமுறையின்போது கொவிட்-19 கிருமிப் பரவல் மோசமாகாமல் இருக்க, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சமூக இடைவெளி விதிமுறையைக் கடுமையாக்க இருப்பதாக தென்கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடுமையாக்கப்படும் என்று அது கூறியது.
நாளை முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒரே இடத்தில் அதிகபட்சம் நான்கு பேர்
மட்டுமே ஒன்றுகூட முடியும்.