துனீஸ்: மோசமடைந்து வரும் கொவிட்-19 பாதிப்பின் காரணமாக துனீசியாவின் சுகாதாரக் கட்டமைப்பு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், துனீசியாவுக்கு கைகொடுக்க மற்ற நாடுகள் முன்வந்துள்ளன.
ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் ஆகியவை மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும்
துனீசியர்களும் உதவிக்கரம்
நீட்டியுள்ளனர்.
மருத்துவச் சாதனங்கள், தடுப்பூசி போன்றவற்றை துனீசியாவுக்கு நன்கொடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ள துனீசியா, போதுமான தடுப்பூசி இல்லாமல் திண்டாடுகிறது.
தற்போது மூன்று மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் நன்கொடை வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதத்துக்குள் நன்கொடை வழங்கப்படும் தடுப்பூசி களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனாக உயரும் என்று துனீசியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சீனாவும் ஐக்கிய அரபு சிற்றரசுகளும் தலா 500,000 தடுப்பூசிகளை நன்கொடை வழங்கியுள்ளன.
துனீசியாவின் அண்டை நாடான அல்ஜீரியா 250,000 தடுப்பூசிகளை நன்கொடை வழங்கி உள்ளது.

