ஜகார்த்தா: கடந்த ஒரு வாரமாக இந்தோனீசியாவில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நிலைமை மோசமடைந்து வருவதால் கூடுதல் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை இந்தோனீசியா தயார் செய்து வருகிறது.
டெல்டா வகை கிருமி
இந்தோனீசியாவில் வேகமாகப் பரவிவருகிறது.
இதன் விளைவாக அந்
நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் நோயாளி கள் பலர் தவிக்கின்றனர். குறிப்பாக, மக்கள் தொகை அதிகம் உள்ள ஜாவா தீவில் நிலைமை மோசமாக உள்ளது.
"மருத்துவமனைகளில்
படுக்கைப் பற்றாக்குறை, சுயமாக தனிமைப்படுத்திக்கொள்வோர் எவ்வித கண்காணிப்பும் இன்றி மரணமடைவது போன்ற காரணங்களால் இந்தோனீசியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் நிகழும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன," என்று இந்தோனீசியாவின் மூத்த அமைச்சர் லுஹுட் பண்ட்ஜாய்ட்டான் நேற்று
முன்தினம் தெரிவித்தார்.