மலேசியாவில் தொற்று மரணங்கள் அதிகரிப்பு

மலேசியாவில் தொற்று மரணங்கள் அதிகரிப்பு

2 mins read
0ea1e3c6-d062-4718-83a3-c5e9bc4bf639
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­வோர் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது.

தொற்று மர­ணங்­கள் கடந்த ஏப்­ரல் மாதத்­தில் இருந்து தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. அந்த எண்­ணிக்கை நேற்று முன்­தி­னம் 207ஆக பதி­வா­கி­யி­ருந்­தது.

கடந்த ஆண்­டில் வாரம் ஒரு முறை ஒரு தொற்று மர­ணத்­தையே கையாண்­ட­தா­கக் கூறும் இறு­திச்­ச­டங்கு நிறு­வ­னத்­தின் முகம்­மது ரஃபியூ­டின் ஸைனல் ரஸித், இப்­போ­தெல்­லாம் 30 மர­ணங்­க­ளைக் கையாள்­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

தின­சரி தொற்று எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மட்­டும் புதி­தாக 17,045 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மலே­சி­யா­வில் தொற்று நெருக்­கடி காலம் தொடங்­கி­ய­தில் இருந்து இதுவே ஆக அதி­க­மான எண்­ணிக்கை என்று கூறப்­ப­டு­கிறது.

மலே­சிய மருத்­து­வ­ம­னை­களில் கடந்த சில வாரங்­க­ளாக தொற்று நோயா­ளி­கள் குவிந்­த­வாறு உள்­ள­னர்.

அங்கு கொரோனா நோயா­ளி­களை மருத்­து­வ­ம­னைக்கு ஏற்­றிச்­செல்­லும் அவ­சர மருத்­துவ வாக­னங்­க­ளின் புழக்­க­மும் அதி­க­ரித்­துள்­ளது.

அடுத்த மூன்று மாதங்­களில் இருந்து ஆறு மாதங்­கள் வரை தொற்­றுப் பாதிப்­பால் மர­ண­ம­டை­வோர் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கும் என அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

கிள்­ளாங் பள்­ளத்­தாக்­குப் பகுதி­யில் மட்­டும் ஒரு நாளைக்கு 120 தொற்று மர­ணங்­களும் நாடு முழு­வ­தும் 200ல் இருந்து 300 தொற்று மர­ணங்­கள் பதி­வா­வ­தா­க­வும் திரு முகம்­மது தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில் மலே­சிய சுகா­தா­ரத்­து­றை­யின் இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா, செப்­டம்­பர் மாதத்­தில் தின­சரி தொற்று எண்­ணிக்கை 24,000ஐ எட்­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக எச்­ச­ரித்­துள்­ளார்.

கடந்த ஏப்­ர­லில் 234 தொற்று மர­ணங்­களே பதி­வா­கின. அது அதற்­க­டுத்த மாதத்­தில் ஆறு மடங்­குக்கு மேல் அதி­க­ரித்து 1,290ஆகப் பதி­வா­கி­யுள்­ளது. அது­வும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் இருந்­த­போது அதி­க­ரித்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

ஜூன் மாதத்­தில் முழு­மை­யான கட்­டுப்­பாடு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட காலக்­கட்­டத்­தில் 2,374 தொற்று மர­ணங்­கள் பதி­வா­கின.

தொற்று மர­ணங்­கள் அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து, அர­சாங்­கம் கோலா­லம்­பூ­ரில் புதிய சவக்­கிடங்கு ஒன்றை திறந்­துள்­ளது. ஐந்து பெரிய கொள்­க­லன்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட அந்த சவக்­கி­டங்­கில் ஒரே நேரத்­தில் 225 உடல்­களை வைக்­க­லாம்.

இந்­நி­லை­யில் மருத்­து­வ­ம­னை­கள் மற்­றும் சவக்­கி­டங்­கு­களில் அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கும் உடல்­க­ளின் புகைப்­ப­டங்­கள் சமூக ஊட­கங்­களில் பரவி வரு­கின்­றன. அந்­தப் புகைப்­ப­டங்­கள் உண்­மை­யா­ன­வையே என்று திரு முகம்­மது ரபி­யூ­டின் தெரி­வித்­துள்­ளார்.