லபுவானில் 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

லபுவானில் 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

1 mins read
37dc8b97-e629-422b-98a8-76daf70af5b8
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ராக ஆக அதி­க­மாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வட்­டா­ர­மாக லபு­வான் கூட்­ட­ர­சுப் பிர­தே­சம் சாதனை படைத்­துள்­ளது.

மலே­சி­யா­வில் 13 மாநி­லங்­களும் 3 கூட்­ட­ர­சுப் பிர­தே­சங்­களும் உள்­ளன. அவற்­றில் லபு­வான் கூட்­ட­ர­சுப் பிர­தே­சத்­தில், தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தில் தகு­தி­பெற்­ற­வர்­கள் 68,500 பேர். அவர்­களில் 54,800 பேர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள். இதனை அந்­நாட்டு பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது.

அங்கு 80 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடு­வ­தற்கு ஜூலை 30ஆம் தேதி இலக்­கா­கக் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், அதற்கு மூன்று நாட்­க­ளுக்கு முன்­ன­தா­கவே அந்த இலக்கை எட்­டி­விட்­ட­தாக லபு­வா­னின் தடுப்­பூ­சிப் பணிக்­கு­ழுத் தலை­வர் திரு ரித்­து­வான் இஸ்­மா­யில் கூறி­னார்.

இந்­தத் தீவின் மக்­க­ளின் வெற்­றி­யாக இந்­தச் சாத­னை­யைக் கரு­து­கி­றோம். தொற்­றில் இருந்து தங்­க­ளை தடுப்­பூ­சி­ பாது­காக்­கும் என மக்­கள் அறிந்­தி­ருப்­ப­தும், எங்­கள் குழு­வி­ன­ரு­டன் இணைந்து பாடு­பட்ட தொண்­டூ­ழி­யர்­க­ளுமே இந்­தச் சாத­னைக்கு உரித்­தா­ன­வர்­கள் என்று புகழ்ந்­தார் திரு ரித்­து­வான்.

ஆறு சிறிய தீவு­க­ளைக் கொண்ட லபு­வான் கூட்­ட­ர­சுப் பிர­தே­சம் மலே­சி­யா­வின் மத்­திய அர­சின் கட்­டுப்­பாட்­டில் உள்­ளது.