தோக்கியோ: தோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த இருவர், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தோக்கியோ 2020 ஒலிம்பிக் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டால் கொவிட்-19 தொற்று மற்ற இடங்களுக்கும் பரவி ஜப்பானிய மருத்துவக் கட்டமைப்புக்கு பெரும் பிரச்சினை ஏற்படும் என்று அஞ்சப் படுகிறது.
இந்த நிலையில் ஒலிம்பிக் விளையாட்டில் மேலும் இருவர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இருவரின் உடல்நிலை சீராக உள்ளது. மூன்றாவது நபர் சிகிச்சை முடிந்து திரும்பிவிட்டார் என்று பேச்சாளர் மாசா டாகாயா தெரிவித்தார்.
தொற்று அதிகரித்துள்ளதால் தலைநகரமான தோக்கியோவில் அவசரநிலை அமலில் உள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை ஒலிம்பிக் ஏற்பாட் டாளர்கள் வெளியிடவில்லை. ஒலிம்பிக் தொடர்பில் நேற்று 24 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இவர்களில் இருவர் விளையாட்டு வீரர்கள் என்று நம்பப்படுகிறது.
இம்மாதம் முதல் தேதியிலிருந்து இதுவரை 193 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

