கோலாலம்பூர்: மலேசியாவில் இலகு ரயில் கட்டுமானத் தளத்தில் சாரக்கட்டு சரிந்ததில் பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் மரண மடைந்தார்.
இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். சிலாங்கூரில் பண்டார் புக்கிட் டிங்கியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
மலேசியாவில் இவ்வாண்டு நிகழ்ந்த 5வது கட்டுமானத் தள விபத்து இது.
விபத்துகளைத் தடுக்க சோதனைகள் தீவிரமாக்கப்படும் என்று மலேசிய அதிகாரிகள் உறுதி கூறியுள்ள நிலையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
நேற்று மாலை 4.00 மணியளவில் இடிபாடுகளிலிருந்து பங்ளாதேஷ் ஊழியரின் உடல் மீட்கப்பட்டது என்று மலேசிய தீ, மீட்பு துறையை மேற்கோள்காட்டி 'த ஸ்டார்' நாளேடு தெரிவித்தது.

