பாரிஸ்: பிரான்ஸ், இந்தியா உட்பட பல நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெகாசஸ் உளவு விவகாரத்தை விசாரித்து வருகிறோம் என்று இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரஞ்சு தற்காப்பு அமைச்சரான ஃபுளோரன்ஸ் பார்லியைச் சந்தித்த அவர், பெகாசஸ் விவகாரத்தை மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும் சொன்னார். இஸ்ரேலின் 'என்எஸ்ஓ' என்ற நிறுவனம் உருவாக்கிய 'பெகாசஸ்' மென்பொருள் மூலம் பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோனும் இதர பிரஞ்சு அதிகாரிகளும் உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பயனீட்டாளருக்குத் தெரியாமலேயே கைத்தொலைபேசியில் உள்ள கேமரா, மைக் ஆகியவற்றை அந்த மென்பொருள் இயக்க முடியும்.
தொலைபேசி உரையாடல்களையும் அது பதிவு செய்யக்கூடியது.
"குற்றச் செயல்களையும் பயங் கரவாத நடவடிக்கைகளையும் தடுப்பதற்காக மட்டும் இணையத் தொடர்பான மென்பொருளை ஏற்று மதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
"அரசாங்க அதிகாரிகள் இன்று என்எஸ்ஓ அலுவலகத்துக்குச் சென்றனர். இது குறித்து தீவிரமாக விசாரிக்கப்படுகிறது," என்று அமைச்சர் பென்னி கான்ட்ஸ் மேலும் கூறினார்.

