ஜப்பானில் தொற்று அதிகரிப்பு; 4 நகரங்களில் அவசரநிலை

ஜப்பானில் தொற்று அதிகரிப்பு; 4 நகரங்களில் அவசரநிலை

1 mins read
5e564b6f-3326-46f8-b0d0-98bb9467c4de
-

தோக்­கியோ: ஒலிம்­பிக் போட்டி நடை­பெற்று வரும் தோக்­கியோ மற்­றும் அத­னைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் நாளுக்கு நாள் தொற்று அதி­க­ரித்து வரு­வ­தால், மேலும் 4 நக­ரங்­க­ளுக்கு அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சைதமா, கன­கவா, சிபா, ஒசாகா ஆகிய நக­ரங்­களில் ஆகஸ்ட் 2 முதல் 31ஆம் தேதி வரை அவ­ச­ர­நிலை கடைப்­பி­டிக்­கப்­படும் என பிர­த­மர் சுகா அறி­வித்­துள்­ளார்.

"தோக்­கியோ, மேற்கு பெரு­ந­க­ரப் பகு­தி­களில் இது­வரை சந்­தித்­தி­ராத மிகப்­பெ­ரிய வேகத்­தில் நோய்த்­தொற்று பரவி வரு­கின்­றது," என்று தெரி­வித்த பிர­த­மர் சுகா, "இதே வேகத்­தில் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்­தால் ஜப்­பா­னின் மருத்­து­வக் கட்­ட­மைப்பு சீர்­கு­லைந்­து­வி­டும்," என எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

மேலும் தோக்­கி­யோ­வைச் சுற்­றி­யுள்ள ஹொக்­கைடோ, கியோட்டோ, ஹியோ­கோன் டி ஃபுகுயோகா உள்­ளிட்ட 5 நக­ரங்­க­ளி­லும் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

ஜப்பானில் நேற்று ஆக அதிகமாக 10,743 பேர் தொற்றுக்கு ஆளாகினர். அவர்களில் தோக்­கி­யோ­வில் தொற்றுக்கு ஆளான 3,300 பேருக்கு அடங்குவர்.