லண்டன்: அடுத்த இரண்டு வாரத்திற்குள் மியன்மாரின் மக்கட்
தொகையில் பாதி பேர் கிருமித் தொற்றுக்கு ஆளாவர் என்று பிரிட்டன் ஐக்கிய நாடுகள் சபையை எச்சரித்துள்ளது.
பிப்ரவரியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து மியன்மாரில் மோசமான கிருமிப் பரவல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரட்டன் கூறியது.
கிருமித்தொற்றுக்கு எதிராக பாதுகாப்பாக தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்கும் வகையில், சண்டை நீடிக்கும் பகுதிகளில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரும் 2565 தீர்மானத்தை கொண்டு வருமாறு பிரிட்டன் ஐநாவிடம் வலியுறுத்தியது.
ராணுவ ஆட்சியை எதிர்த்து மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அதிகரிக்கும் தொற்று நோயாளிகளைச் சமாளிக்கக்கூடிய அளவிற்கு மருத்துவர்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மியன்மாரின் சுகாதார துறை 40 விழுக்காடு மட்டுமே செயல்
படுவதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.
மருத்துவ ஊழியர்கள், மருத்துவ வசதிகளுக்கு எதிராக ராணுவப் படைகள் குறைந்தபட்சம் 260 தாக்குதல்களை நடத்தியதாகவும் குறைந்தது 67 மருத்துவ ஊழியர்
களைத் தடுத்து வைத்திருப்பதாகவும் ஐநா கூறுகிறது.
புதன்கிழமையன்று அங்கு 5,000 பேர் தொற்றுக்கு ஆளாகினர். ஆனால் உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கையும் ராணுவம் கூறுவதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மியன்மாரில் இதுவரை சுமார் 1.75 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

