ஹாங்காங்: ஹாங்காங்கில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் இரண்டு முறை பாட்டுப் பாடியதற்காக பிரபல பாடகரான ஆண்டனி வோங் மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திரு வோங் மற்றும் எதிர்க்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆவ் நோக் ஹின் ஆகியோர் மீது ஊழலுக்கு எதிரான ஊழல் கண்காணிப்புக் குழு ஊழல் குற்றச்சாட்டை கொண்டு வந்துள்ளது. திரு ஆவ் தேர்தலில் போட்டியிட்டபோது பொழுது போக்குகளை நடத்தி மக்களை தமக்கு வாக்குப்போட தூண்டியதாக குற்றச்சாட்டு கூறுகிறது.
அப்போது அந்தப் பேரணியில் 59 வயது பாடகரும் பாடலாசிரியருமான ஆண்டனி இரண்டு பாடல்களைப் பாடியதாகக் கூறப் படுகிறது. 2018 மார்ச் 3ஆம் தேதி எடின்பர்க் பிளேசில் அந்தப் பேரணி நடைபெற்றது.
இடைத்தேர்தலில் ஆவ் வெற்றி பெறுவதற்கு முன்பு பேரணி நடத்தப்பட்டது. திரு ஆவ் ஏற்கெனவே சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.

