ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கொவிட்-19 தொற்றுக்குப் பலி யானவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளது.
இதனால் ஆசியாவில் 100,000 பேருக்கு மேல் மரணங்கள் பதிவான 2வது நாடாக இந்தோனீசியா உருவெடுத்துள்ளது.
நேற்று ஒரு நாள் மட்டும் தொற்றுக்கு 1,747 பேர் மாண்டனர்.
இதுவரை, கொவிட்-19 தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 110,636ஐத் தொட்டுள்ளது.
கொள்ளைநோய் பரவத் தொடங்கியதிலிருந்து இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் 100,000 பேருக்கு மேல் தொற்று பலிவாங்கி விட்டது.
அந்த வரிசையில் இந்தோனீசியா 11வது நாடாக இணைகிறது.
கிருமித்தொற்று மையம் எப்படி அெமரிக்காவையும் ஐரோப்பாவையும் தாண்டி பரவுகிறது என்பதை இந்தோனீசிய நிலவரம் காட்டுகிறது.
அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்தோனீசியாவில் தினசரி மரண எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தடுப்பூசி பற்றாக்குறை, சுகாதாரப் பராமரிப்பு வசதியின்மை போன்ற காரணங்களால் இந்தோனீ சியாவில் அதிகமானோர் மரண மடைகின்றனர்.
இந்தோனீசியாவின் 270 மில்லியன் மக்கள்தொகையில் வெறும் எட்டு விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.
அமெரிக்காவில் ஐம்பது விழுக்காட்டினருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு 300 டிரில்லியன் ரூப்யாவுக்கு(28.3 பில்லியன் வெள்ளி) மேல் செலவாகும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"இது, எண்ணிப் பார்க்க முடியாத தொகை," என்று நேற்று பயிலரங்கு ஒன்றில் பேசிய ஸ்ரீ முல்யானி இந்திராவதி கூறினார்.
எப்படி இந்த நிதி ஒதுக்கப்படும் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
தடுப்பூசி வாங்கவும் கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கவும் இதர செலவுகளுக்கும் ஏராளமான நிதி தேவைப்படுவதாக அமைச்சர் இந்திராவதி கூறினார்.