ஏதென்ஸ் நகரத்தை மூடிய கரும்புகை; வெளியே வர வேண்டாம் என மக்களுக்கு உத்தரவு

2 mins read
5b2f3e4e-87b2-4b77-bfc7-509de6f62004
எரிந்துகிடக்கும் கார், வீடுகளுக்கு அருகே தீயை அணைக்கப் போராடும் வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

ஏதென்ஸ்: கிரி­ஸில் கட்­டுக்­க­டங்­கா­மல் பர­வும் காட்­டுத் தீயால் ஏதேன்­ஸின் வடக்­குப்­ப­குதி முழு­வதும் கரும்­பு­கை­யில் மூழ்­கி­விட்­டது. இதையடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்­டாம் என்று அதி­கா­ரி­கள் உத்­த­ர­விட்­டுள்­ள­னர்.

நக­ரின் புற­ந­கர்ப் பகு­தி­யில் உள்ள பர்­னிதா மலை­யின் சரி­வு­களில் காட்­டுத் தீ கொழுந்­து­விட்டு எரி­வ­தால் நக­ரமே புகை மண்­ட­ல­மா­கக் காட்­சி­ய­ளிக்­கிறது.

தீயை அணைக்க 500க்கும் மேற்­பட்ட வீரர்­கள் போராடி வரு­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு உத­வி­யாக ஒன்­பது ஹெலி­காப்­டர்­கள், ஐந்து விமா­னங்­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

போலி­சா­ரும் ராணு­வத்­தி­ன­ரும் களத்­தில் இறக்­கப்­பட்­டுள்­ள­னர்.

"தீ இன்­ன­மும் எரிந்­து­கொண்­டிருக்­கிறது. அதன் பரப்­ப­ளவு அக­ல­மாக உள்­ள­தால் நெருங்க முடி­யாத அள­வுக்கு வெப்­பம் சுட்­டெ­ரிக்­கிறது," என்று தீணைப்­புப் படை­அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

கடு­மை­யான வெப்­பம், கரும்­புகை­யால் காற்­றில் கலந்­துள்ள தீங்கு விளை­விக்­கும் துகள்­க­ளால் சன்­னல்­களை மூடி, வெளியே நட­மாட்­டத்­தைக் குறைத்துக்கொள்­ளு­மாறு தேசிய கண்­கா­ணிப்பு நிலை­யம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

வெப்­ப­நிலை 40 டிகி­ரி­யைத் தாண்­டி­விட்­டது. ஆனால் சிவில் பாது­காப்பு அமைச்­சரான நிகோஸ் ஹார்­டா­லி­யாஸ், குறை­வாக வீசும் காற்­று, ஈரப்­ப­தத்தால் நிலை­மை சற்று மேம்பட்டுள்ளது என்­றார்.

ஒரு பகு­தி­யில் காட்­டுத் தீ கட்டுப்ப­டுத்த முடி­யாத அள­வுக்கு எரிந்­து­கொண்­டி­ருக்­கிறது. மூன்று இடங்­களில் தீ குறைந்து வரு­கிறது. உயிர்ச்­சே­தம் இல்லை.

செவ்­வாய்க்கிழமை அன்று ஏதென்­சின் மத்­திய வட்­டா­ரத்­துக்கு வடக்கே இரு­பது கி. மீட்­டர் தொலை­வில் உள்ள வேரிம்­பொம்பி நக­ரில் காட்­டுத் தீ மூண்­டது.

கடு­மை­யான வெப்­பத்­தால் தீ மற்ற நக­ரங்­க­ளுக்­கும் பரவி வீடு­கள், கார்­கள் எரிந்து நாச­மா­யின. குடி­யி­ருக்­கும் வீட்­டை­விட்டு மக்­கள் வெளி­யேற வேண்டியதாயிற்று.

"கட­வுளே, நன்றி தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். இது­வரை உயிர்ச்­சே­தம் ஏற்­ப­ட­வில்லை," என்று பிர­த­மர் கிரி­யா­கோஸ் மிட்­சோ­டா­கிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்­கி­டையே பாதிக்­கப்­பட்ட இடங்­களை சீர் செய்­யும் நட­வ­டிக்­கை­களில் அதி­கா­ரி­கள் இறங்­கி­யுள்­ள­னர்.

மின்­சார விநி­யோ­கம் படிப்படியாக சரி செய்­யப்­பட்டு வரு­கிறது.