கான்பரா: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் கட்டுமானப் பணிகளைத் தொடங்க நியூ சவுத் வேல்ஸ் அனுமதி அளித்துள்ளது.
ஆனால், வேலைக்குச் செல்பவர்கள் தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டும்.
நேற்று முன்தினம் அங்கு 344 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் சில பகுதி
களுக்கு முடக்கநிலை விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறினார் நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர்.
இருப்பினும் முக்கிய வேலை துறைகளை மீண்டும் தொடங்கும் நோக்கில் கட்டுமான வேலைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 25 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, மெல்பர்னில் இரண்டாவது வாரமாக முடக்கநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அங்கு மேலும் 20 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் எப்படி தொற்றுக்கு ஆளானார்கள் என்பது தெரியாத நிலையில், ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப் படுவதாக விக்டோரியா முதல்வர் டான் ஆண்ட்ரூஸ் அறிவித்து
உள்ளார்.

