மூன்று நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை

மூன்று நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை

1 mins read
b5869dfd-ae9c-4d4a-b278-0710ddb964a6
-

மணிலா: மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­படும் நிலை­யில் செல்­லும் கொவிட்-19 நோயா­ளி­கள் அதற்­காக இரண்டு அல்­லது மூன்று நாட்கள் காத்­தி­ருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது பிலிப்­பீன்­சில்.

ஜூலை மாத நடுப் பகுதி முதல், அவ­சர சிகிச்சை பிரிவை நாடு­வோர் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து கொண்டே போவ­தாக அவ­சர மருத்­து­வத்­திற்­கான பிலிப்­பீன்ஸ் மருத்­துவக் கல்­லூரி மருத்­து­வ­ரான பவு­லின் கன்­வோ­கர்.

சென்ற வாரம் வரை, அவ­சர சிகிக்சை பிரி­வில் இருந்து மருத்­துவப் படுக்­கைக்கு மாற்­றப்­ப­டு­

வ­தற்கு 24 மணி நேரம் மட்­டுமே காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருந்­தது.

தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளின் மற்ற குடும்­பத்­தி­னர் சில நாட்­க­ளுக்­குப் பிறகு உடல்­ந­ல­மில்­லா­மல் மீண்­டும் மருத்­து­வ­ம­னைக்கு வரு­கி­றார்­கள் என்­றும் குறிப்­பாக மூத்­தோர் மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

மேலும் இளம் வய­தி­னர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­படும் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

இதற்கிடையே, கொவிட்-19 சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட தற்காலிக மருத்துவப் படுக்கைகளும் பெரும்பாலான மருத்துவமனைகளில் நிரம்பி வருவதாகக் கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சை பிரிவில் 68 விழுக்காட்டு படுக்கைகளும் சாதாரண சிகிச்சை பிரிவில் 58 விழுக்காடும் நிரம்பிவிட்டதாக சுகாதாரத் துறை நேற்று தெரிவித்தது.

மேலும் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் தற்போது 21.9 விழுக்காடாக உள்ளது. அதாவது பரிசோதனை செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் தொற்றுக்கு ஆளாகினர்.

இதற்கு முன்பு சென்ற மார்ச் -ஏப்ரல் மாதத்தில் தொற்று உச்சத்தில் இருந்தபோது இந்த விகிதம் 25 விழுக்காடாக இருந் தது.

பிலிப்பீன்சில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் அதிகரிப்பு