'மாநில சட்டப் பேரவையைக் கலைக்கத் தயங்கமாட்டேன்'

'மாநில சட்டப் பேரவையைக் கலைக்கத் தயங்கமாட்டேன்'

1 mins read
e5d11420-d7de-449d-9019-5a13f75c1e6f
-

பெட்­டா­லிங் ஜயா: அர­சி­யல்­வா­தி­கள் தொடர்ந்து பத­விக்­கான போராட்­டத்­தில் ஈடு­பட்டு மாநில அர­சாங்­கத்­திற்­குப் பங்­கம் விளை­விக்­கும் வகை­யில் நடந்­து­கொண்டால் மாநில சட்­டப் பேரவை கலைக்­கப்­ப­ட­லாம் என்று ஜோகூர் மாநி­லத்­தின் மன்­னர் சுல்­தான் இப்­ரா­ஹிம் இஸ்­கந்தர் எச்சரித்துள்­ளார்.

"எனது மாநி­லத்­தை­யும் அரசாங்கத்­தை­யும் உலுக்­கக்­கூ­டிய அர­சி­யல் விளை­யாட்­டு­களில் சட்டப் பேரவை உறுப்­பி­னர்­கள் ஈடு­பட்­டால் அதை நான் சகித்­துக்­கொள்­ள­மாட்­டேன். அந்த நிலை வந்­தால் சட்­டப் பேர­வை­யைக் கலைக்க நான் தயங்­க­மாட்­டேன்," என்று அவர் எடுத்­து­ரைத்­தார்.

"தங்களைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு மக்களின் விருப்பங்களையும் நலனையும் கருத்தில்கொள்ளாதோர் மக்களைப் பிரதிநிதிக்கும் அரசியல்வாதிகளாக இருக்கத் தேவையில்லை," என்று அவர் குறிப்பிட்டார். ஜோகூர் மாநி­லத்­தின் 14வது சட்­டப் பேரவை அமர்­வின் தொடக்கத்­தில் சுல்­தான் இப்­ரா­ஹிம் இவ்­வாறு சொன்­னார்.

மக்­க­ளுக்கு உத­வ­வும் ஜோகூரின் பொரு­ளி­யலை மீட்சிபெற செய்யவும் கலந்­து­பேசி தெளி­வான திட்­டத்தை வரைய இந்த அமர்வை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்­டும் என்று அவர் சட்­டப் பேரவை உறுப்­பி­னர்­க­ளுக்கு நினை­வூட்­டி­னார்.

"சுய­ந­ல­மாக இருக்­கா­தீர்­கள். மக்­கள் அவ­திப்­ப­டு­கி­றார்­கள், பசி­யில் தவிக்­கி­றார்­கள், வேலை­களை இழக்­கி­றார்­கள், கொவிட்-19 தொற்றால் சிலர் உயி­ருக்­கும் போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்," என்று சுல்­தான் சுட்­டி­னார்.

சுல்­தான் இப்­ரா­ஹி­மின் எச்­ச­ரிக்கை அவ­ரது அதி­கா­ர­பூர்வ ஃபேஸ்புக் பக்­கத்­தி­லும் இடம்­பெற்றது.