கேன்பராவில் முடக்கநிலை

கேன்பராவில் முடக்கநிலை

1 mins read
75f20454-2c45-462a-a273-1bb264dd0672
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் தலை­ந­கர் கேன்பராவில் நேற்று முதல் ஏழு நாட்­க­ளுக்கு முடக்­க­நிலை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அந்­ந­க­ரில் இது­வரை கொவிட்-19 கிரு­மித்­தொற்று கட்டுப்­பா­டு­கள் அதி­கம் செயல்­ப­டுத்­தப்­படா­மல் இருந்­தது.

ஆனால் இப்­போது அங்­கே­யும் ஒரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்பட்­டுள்­ளது.

அந்த நப­ரி­ட­மி­ருந்து பிற­ருக்­குத் தொற்று ஏற்­படும் அபா­யம் இருந்­த­போது அவர் சமூ­கத்­தில் நட­மாடிக்­கொண்­டி­ருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று மதி­யம் மூன்று மணி முதல் கேன்­பராவின் சுமார் 400,000 மக்­க­ளுக்கு வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

அவ­ச­ரப்­பட்டு தேவைக்கு அதி­க­மாக அத்­தி­யா­வ­சிப் பொருட்­களை வாங்­கத் தேவை­யில்லை என்று நக­ர­வா­சி­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்டது.