வெல்லிங்டன்: கிருமிப் பரவல் அபாயம் குறைவாக இருக்கும் நாடுகளிலிருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள பயணிகளை அடுத்த ஆண்டு முதல் கட்டுப்பாடுகளின்றி வரவேற்க நியூசிலாந்து ஆயத்தமாகிவருகிறது. அத்தகைய பயணிகளைத் தனிமைப்படுத்தவேண்டிய அவசியமும் இருக்காது என்று அந்நாட்டுப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
தற்போது பயணிகளுக்குத் திறந்துவிட நியூசிலாந்து தயாராய் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயணிகளைக் கட்டங்கட்டமாக வரவேற்க நியூசிலாந்து திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். கொவிட்-19 கிருமி உலகளவில் பரவத் தொடங்கியதிலிருந்து நியூசிலாந்து கிட்டத்தட்ட முற்றிலுமாகவே பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்காமல் இருந்துள்ளது.