செப்டம்பர் ஏழாம் தேதி மலேசியாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு

செப்டம்பர் ஏழாம் தேதி மலேசியாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு

1 mins read
74fdc8a0-e505-47f9-ab75-7103f40eaecf
-

கோலா­லம்­பூர்: மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு அடுத்த மாதம் ஏழாம் தேதி­யன்று நடை­பெ­ற­வுள்­ளது. அதற்கு முதல் நாள், நான்­கா­வது முறை­யாக நாடா­ளு­மன்­றம் கூட்­டப்­படும்.

தொடர்பு, பல்லூடக அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா மெய்நிகர் வாயிலாக இந்தத் தகவலை நேற்று வெளியிட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை விரைவில் நடத்துமாறு மலேசிய மாமன்னர் நேற்று முன்தினம் பிரதமர் முகைதீன் யாசினுக்கு அறிவுறுத்தினார்.

இதற்கிடையே, கூட்டணி ஆட்சி எந்தத் திசையை நோக்கிப் போகிறது என்பதைப் பற்றி கலந்துபேச சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சி, தேசிய முன்னணிக் கூட்டணியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்ற ஆண்டு முகை­தீன் யாசின் பிர­த­ம­ரா­ன­தி­லி­ருந்து மலேசி­யா­வில் அர­சி­யல் சூழல் நிலைத்­தன்­மை­யின்றி காணப்பட்டு ­வ­ரு­கிறது.