எதிர்க்கட்சியினரின் ஆதரவை நாடும் முகைதீன்

எதிர்க்கட்சியினரின் ஆதரவை நாடும் முகைதீன்

2 mins read
0c4f1565-1d17-46f8-8eec-a614c130e722
-

புத்­ரா­ஜெயா: அடுத்த மாதம்

மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் பிர­த­மர் முகை­தீன் யாசி­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லா ­வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட இருக்­கிறது.

பிர­த­மர் பத­வி­யில் நீடிக்க தொடர்ந்து பல சவால்­களை எதிர்­நோக்­கும் திரு முகை­தீன், இம்­முறை தமது பெரிக்­கத்­தான் நேஷ­னல்­ கூட்­ட­ணிக்கு வெளியே ஆதரவு தேடப்­போ­வ­தாக தெரி­வித்­துள்­ளார். ஆளும் கூட்­ட­ணி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு அளிப்­ப­தில் சந்­தே­கம் ஏற்­பட்­டுள்­ள­தால் எதிர்க்­கட்­சி­யி­ன­ரின் ஆத­ரவை திரு முகை­தீன் நாடு­வ­தாக அர­சி­யல் விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர். நம்­பிக்கை இல்லா வாக்­கெ­டுப்­பில் தமக்கு ஆத­ரவு அளிப்­பது தொடர்­பாக எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் பேச்­சு­வார்த்தை நடத்த இருப்­ப­

தா­கப் பிர­த­மர் முகை­தீன் முடி­வு எடுத்­துள்­ளார்.

வெளிப்­ப­டை­யா­கக் கூறா­விட்­டா­லும் திரு முகை­தீன் திடீ­ரென்று எடுத்­துள்ள இந்த முடிவு, அவ­ருக்கு பெரும்­பா­லான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு இல்லை என்­ப­தைக் காட்­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"நம்­பிக்­கை­யில்லா வாக்­கெ­டுப்­பில் வெற்றி பெற எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த அமைச்­ச­ரவை இணங்­கி­உள்­ளது. எதிர்க்­கட்­சி­யின் ஆத­ரவு இருந்­தால்­தான் இந்த நம்­பிக்­கை­யில்லா வாக்­கெ­டுப்­பில் வெற்றி பெற முடி­யும்," என்று திரு

முகை­தீன் தெரி­வித்­தார்.

தமக்­குப் பெரும்­பா­லான நாடாளு ­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு இருப்­பதை வேறு எந்த ஒரு நாடாளு மன்ற உறுப்­பி­ன­ரா­லும் நிரூ­பிக்க முடி­யாது என்று குறிப்­பிட்ட திரு முகை­தீன், பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து தாம் வில­கா­த­தற்கு அதுவே

கார­ணம் என்று கூறி­னார்.

"கூட்­ட­ரசு அர­மைப்­புச் சட்­டத்­தின்­படி நான் இப்­போது பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து வில­கி­னால் அமைச்­சர்­கள் அனை­வ­ரும் பதவி விலக வேண்டிய நிலை ஏற்­படும். இதன் விளை­வாக பெரிக்­கத்­தான் நேஷ­னல் கூட்­டணி அர­சாங்­கம் கவி­ழும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை என்­றார் திரு முகை­தீன்.

நாடா­ளு­மன்­றம் கூடும்­போது பொதுத் தேர்­த­லில் வாக்­க­ளிப்­

போ­ருக்­கான குறைந்­த­பட்ச வயதை 18க்குக் குறைக்க பரிந்­துரை செய்­யும் மசோ­தா­வைத் தாக்­கல் செய்ய இருப்­ப­தாக திரு முகை­தீன் நேற்று தெரி­வித்­தார். கொவிட்-19 சூழலைப் பொறுத்து, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இறுதிக்குள் பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.