குச்சிங்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள அரச மலேசிய ஆகாயப் படை முகாமில் நேற்று காலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு அதிகாரிகள் மாண்டனர். முகாமின் பாதுகாவலர் அறையில் தாக்குதல் நடந்ததாக சரவாக் போலிஸ் ஆணையர் ஐடி
இஸ்மாயில் தெரிவித்தார்.
அதிகாரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னோர் அதிகாரி குண்டடிப்பட்டும் அருகில் இருந்த மருந்தகத்துக்கு வாகனம் ஓட்டிச் சென்றார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மாண்டதாக சரவாக் போலிசார் தெரிவித்தனர்.
சக அதிகாரிகளைத் துப்பாக்கி யால் சுட்டவர் தமது உயிரை மாய்த்துக்கொண்டார்.
சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்துவதாக அரச மலேசிய ஆகாயப் படை கூறியது. அதற்கு முன்பு சம்பவம் குறித்த ஊகச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களிடம் அது கேட்டுக்கொண்டது.
"இந்த வழக்கு குறித்து போலிசார் விசாரணை நடத்துகின்றனர். இந்த விவகாரத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். இருப்பினும், தாக்குதல் நிகழ்ந்ததற்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் விசாரணைக் குழு ஒன்றை அமைப்போம்," என்று அரச மலேசிய
ஆகாயப் படை நேற்று கூறியது.

