இங்கிலாந்தில் ஆறு பேரின் உயிரைப் பறித்த துப்பாக்கிச் சூடு

இங்கிலாந்தில் ஆறு பேரின் உயிரைப் பறித்த துப்பாக்கிச் சூடு

1 mins read
c1f3036f-ebde-43a9-8775-fe00977ff8a3
-

பிலை­மத்: இங்­கி­லாந்­தின் தென்­மேற்­குப் பகு­தி­யில் உள்ள டெவோன் மாநி­லத்­தின் துறை­முக நக­ரான பிலை­மத்­தில் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்த துப்­பாக்­கிச் சூட்­டில் ஐந்து பேர் மாண்­ட­னர். அவர்­களில் மூன்று பெண்­களும் இரண்டு ஆட­வர்­களும் அடங்­கு­வர். அவர்­க­ளைத் தவிர்்த்து, தாக்­கு­தல் நடத்­தி­ய­வர் என்று சந்­தே­கிக்­கப்­படும் ஆட­வ­ரும் மாண்­டு­விட்­ட­தாக டெவோன், கோர்ன்­வால் போலி­சார் தெரி­வித்­த­னர்.

தாக்­கு­த­லில் பத்து வய­துக்­கும் குறை­வான சிறு­பிள்ளை ஒன்று உயி­ரி­ழந்­த­தாக பிரிட்­டிஷ் நாடா­ளு ­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­தார். ஆனால் இந்­தத் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் பயங்­க­ர­

வா­தத் தாக்­கு­தல் அல்ல என்று போலி­சார் கூறி­னர்.

மர­ண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை அடிப்­ப­டை­யில் கடந்த பத்து ஆண்­டு­களில் இதுவே பிரிட்­ட­னில் நிகழ்ந்­தி­ருக்­கும் ஆக மோச­மான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம். தாக்­கு­தலை அடுத்து, பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் முடுக்கி­ வி­டப்­பட்­டன. துப்­பாக்­கிக்­கா­ரர் வீடு வீடா­கச் சென்று துப்­பாக்­கி­யால் சுட்­ட­தாக சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­கள் தெரி­வித்­த­னர்.