சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த புதன்கிழமையிலிருந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக 21 பேர் மாண்டுவிட்டனர். மேலும் நான்கு பேரைக்
காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்தனர். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து மக்களைப் படகில் வைத்து மீட்புப் பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றினர். படம்: ராய்ட்டர்ஸ்

