ஹோ சி மின் நகரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு

ஹோ சி மின் நகரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு

1 mins read
771b606f-455b-4ab8-8cf0-c6afeffdbbb6
-

ஹோ சி மின்: வியட்­னா­மின் ஆகப் பெரிய நக­ர­மான ஹோ சி மின் நக­ரில் இம்­மாத இறுதி வரை

நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு நீட்­டிக்­கப்­படும்.

அந்­ந­க­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர், மர­ண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. வியட்­னா­மில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரில் கிட்­டத்­தட்ட 50 விழுக்­காட்­டி­னர் ஹோ சி மின் நக­ரைச் சேர்ந்­த­வர்­கள்.

அந்­ந­க­ரில் 4,800க்கும் மேற்­பட்­டோர் கிரு­மித்­தொற்­றால் மாண்­டு­விட்­ட­னர். கடந்த ஏப்­ரல் மாதம் வரை கிரு­மிப் பர­வலை வியட்­னாம் கட்­டுக்­குள் வைத்­தி­ருந்­தது.

ஆனால் அதற்­குப் பிறகு நிலைமை கைமீ­றிப் போனது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக நீண்­ட­கா­லப் போராட்­டத்­துக்­குத் தயா­ராக வேண்­டும் என்று ஹோ சி மின் நகர் கம்­யூ­னிஸ்ட் கட்­சிக் குழு­வின் துணைச் செய­லா­ளர் ஃபான் வான் மாய் தெரி­வித்­தார்.

வியட்­னா­மில் கொவிட்-19 தடுப்­பூசி பற்­றாக்­குறை நிலவி வரும் நிலை­யில் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.