சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சின் தலைநகரான
சிட்னியில் டெல்டா கொவிட்-19 கிருமி வகையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்
படுத்த அது தயாராகி வருகிறது.
சிட்னி நகரில் கடந்த ஏழு வாரங்களாக முடக்கநிலை நடப்பில் இருந்து வருகிறது. இருப்பினும், கொவிட்-19 அன்றாடப் பதிவு குறைந்தபாடில்லை. மாறாக, அது அதிகரித்து வருகிறது. இதனால் முடக்கநிலை விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இல்லத் தனிமை உத்தரவை நடைமுறைப்படுத்த கூடுதலாக 500 ராணுவ வீரர்களின் உதவி தேவை என்று நியூ சவுத் வேல்ஸ் போலிஸ் படை கோரிக்கை விடுத்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் தி ஹெரல்ட் நாளிதழ் தெரிவித்தது.
சிட்னியில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதம் ஏந்தாத ராணுவ வீரர்கள் சுற்றுக்
காவல் பணியில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 300 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

