மும்பை போலிஸ், இரண்டு மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களின் காணொளியைப் பகிர்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ஓட்டுநர்கள், முன்யோசனையின்றி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காணொளி, இந்த இரண்டு ஆடவர்கள் தலைக்கவசங்கள் இன்றி தங்களது மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்து சில சாகசங்களைச் செய்வதைக் காட்டுகிறது.
கனவு உலகம் வேறு, நிஜ வாழ்க்கை வேறு என்பதையும் போலிசார் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.