ஜப்பானில் கனத்த மழையால் நிலச்சரிவுகள், உயிர்ப் பலி

ஜப்பானில் கனத்த மழையால் நிலச்சரிவுகள், உயிர்ப் பலி

1 mins read
218e70de-36c0-4fa1-848d-aef3c5cc63fb
கன்சாக்கி நகரில் நிலச்சரிவில் அழிந்த வீடுகள். படம்: இபிஏ -

டக்­கேயொ(ஜப்­பான்): ஜப்­பா­னின் பல்­வேறு பகு­தி­கள் கனத்த மழை­யால் பெரும் பாதிப்­புக்கு உள்­ள­ாகி­யி­ருக்­கின்­றன. அந்­நாட்­டின் மேற்­குப் பகு­தி­யில் சாலை­களும் கட்­ட­டங்­களும் வெள்­ளத்­தில் மூழ்­கின. நேற்றிரவு ஒன்பது மணி நிலவரப்படி குறைந்தது மூவர் பலி­யா­யி­னர். சில­ரைக் காண­வில்லை.

கியூஷு தீவு உட்­பட பல பகுதி­களில் வர­லாறு காணாத அள­வில் மழை பொழிந்­தது. இதுபோன்ற நிகழ்வை இதுவரை பார்த்ததில்லை என்று மக்களில் சிலர் கூறினர்.

நேற்­றைய நில­வ­ரப்­படி கியூஷு, தோக்­கியோ பகு­தி­களில் மழை நின்­றது. ஆனால் நாட்­டின் இதர பகு­தி­களில் சில தொடர்ந்து கனத்த மழை­யால் பாதிக்­கப்­பட்டன.

சகா மாநி­லத்­தில் உள்ள டக்­கேயொ நக­ரில் சாலை­கள் முழு­மை­யாக வெள்­ளத்­தில் மூழ்­கின. மீட்­புப் பணி­யா­ளர்­கள் பட­கு­களில் வெள்­ளத்­தில் சென்று சேதத்தை ஆராய்­வ­தி­லும் மக்­க­ளைக் காப்பாற்­று­வ­தி­லும் ஈடு­பட்­ட­னர்.