கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 தடுப்பூசிபோட்டுக்கொண்டோருக்குக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படவுள்ளன.
பொருளியலின் சில துறைகளை மீட்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். அதன்படி சில மாநிலங்களில் சிகை அலங்காரக் கடைகள், மின்சாரப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், வாகனக் கருவிகள், அறைகலன்கள் ஆகியவற்றை விற்கும் கடைகள் இயங்கலாம்.
வேறு சில இடங்களில் துணிமணி, விளையாட்டுப் பொருட்கள், பழைமைவாய்ந்த பொருட்கள் ஆகியவற்றை விற்கும் கடைகளும் இயங்கலாம்.
மோசமாகப் பரவிவரும் கொவிட்-19 கிருமிப் பரவலையும் கட்டுப்படுத்தி பொருளியலையும் மிட்கும் முயற்சியில் மலேசியா ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி முதல் பள்ளிகள் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

