ஆப்கானிஸ்தானை கைப்பற்றும் முயற்சியில் தலிபான் படையினர் முன்னேறிவிட்ட நிலையில், தலைநகர் காபூலைவிட்டு எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் காபூல் விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 16) குவிந்தனர்.
எனினும், பாதுகாப்பு கருதி காபூல் விமான நிலையத்தில் அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
விமான நிலைய ஓடுபாதையில் பதற்றம் நிறைந்த சூழல் நிலவுவதை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் காணொளிகள் காட்டின.
விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பயணிகள் விமானம் ஒன்றில் ஏறுவதற்கு அதை நோக்கி பெரும் கூட்டம் ஓடியது. மக்கள் தங்களது உடைமைகளையும் பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு ஓடும் காட்சிகள் காணொளிகளில் பதிவாகின.