கொவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டுவர கூடுதல் உதவி

1 mins read
9b2155a0-5786-4490-b31d-5c9384450e6b
வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ. படம்: இபிஏ -

ஜகார்த்தா: கொவிட்-19 நெருக்­கடிநி­லை­யால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­குக் கூடு­தல் உதவி வழங்­கப்­படும் என்று இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ உறுதி அளித்­துள்­ளார்.

அடுத்த ஆண்­டுக்­கான

வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை அவர் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில்

தாக்­கல் செய்­தார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யி­லி­ருந்து இந்­தோ­னீ­சி­யப் பொரு­ளி­ய­லும் சமு­தா­ய­மும் மீண்­டு­வர தொடர்ந்து நிதி ஒதுக்­கப்­படும் என்­றார் அவர்.

கொவிட்-19 பாதிப்பு முடி­வுக்கு வரா­விட்­டால் நிலை­யற்­ற தன்மை தொட­ரும் என்று திரு ஜோக்கோ எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

வசதி குறைந்­தோ­ருக்­கும்

எளி­தில் பாதிப்­ப­டையக்­கூ­டி­ய­வர்­

க­ளுக்­கும் கூடு­தல் சமூ­கப் பாது­காப்­புத் திட்­டங்­கள் நடை­மு­றைப்

­ப­டுத்­தப்­ப­டு­ம் என்று அவர் தெரி வித்தார். வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 9.4 விழுக்காட்டுத் தொகை கிருமித் தொற்றை எதிர்கொள்ள பயன் படுத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.