சோல்: தென்கொரியாவில் கொவிட்-19 நான்காவது அலை ஏற்பட்டிருப்பதால் அந்நாட்டின் மருத்துவத் துறை முடங்கும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
மருத்துவமனைகளில் படுக்கைப் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் காத்துக்கொண்டிருந்த பெண் மாண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நேற்று முன்தினம் தென்கொரியாவில் புதிதாக 1,556 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. தென்கொரியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 225,481ஆக அதிகரித்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1,493 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தென்கொரிய அரசு கூறியது.

